Wednesday, July 31, 2013

தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு மையத் திறப்பு விழா

வணக்கம்.

எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் தமிழ் மரபு மையம் இன்று தொடக்க விழா காண்கின்றது.  தமிழ் மரபு அறக்கட்டளையின் 12 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் அமைகின்றது. காரணம் மாணவர்கள் தமிழர் மரபு, பண்பாடு அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இது காறும் பட்டறைகளும் சிறப்பு சொற்பொழிவுகளும் ஆண்டு தோறும் அவ்வப்போது நடத்தி வந்த தமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் இப்பணிகளின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மாணவர்களுக்கான மரபு மையத்தை தொடங்கி வைக்கின்றது.

இந்த முயற்சியில் முழுதும் உடன் இருந்து மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாணவர் நலம் பொது அறிவு வளர்ச்சி என்பது ஒரு புறமிருக்க தமிழர் மரபு, பண்பாட்டு நலன் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இவரது ஆர்வம் ஆச்சரியப்படுத்துவது.

கல்லூரி முதல்வருக்கும், நிர்வாகத்தினருக்கும், பேராசிரியர், ஆசிரியர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்தினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது. மாணவர்களுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்கள்.

முனைவர்.சுபாஷிணி
ஜெர்மனி
தமிழ் மரபு அறக்கட்டளை.